கோயில் சுவரை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலாக திருவாலங்காட்டில் அமைந்துள்ள வடாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக சுமார் 8 ஆயிரம் சதுர அடி நிலம் திருவள்ளூர் அரக்கோணம் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளது. இந்த நிலத்தில் திருமண மண்டபம், கோசாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அறநிலையத்துறை சார்பில் அந்த நிலம் சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், சில மர்ம நபர்கள் அந்த சுற்றுச்சுவரை கடப்பரையால் இடித்து சேதப்படுத்தி உள்ளனர். சுற்றுச்சுவரை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அறநிலையத்துறை அந்த இடத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.