எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு பட்ஜெட் மின்மினிப்பூச்சி, மக்களுக்கும் வெளிச்சம் தராது, கானல் நீர் தாகம் தீர்க்காது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார் “கல்வியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்க அனுமதி கோரினோம். அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் நாங்கள் வெளியேறினோம். நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யவில்லை. இரண்டு ஆண்டுகளில் அதிகளவில் கடன் வாங்கியுள்ளனர். எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை நடக்கிறது. இளைஞர்கள் மத்தியில் போதைப்பழக்கம் அதிகரிட்துள்ளது.

திமுக ஆட்சியில் சொத்து வரி, பால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஜிஎஸ்டி., கலால் வரி, பத்திரப்பதிவு, பெட்ரோல், டீசல் வரி வருவாய் உயர்ந்துள்ளது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது உண்மையில் தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருந்திருக்க வேண்டும். திமுக ஆட்சியில் வரி வருவாய் அதிகரித்தபோதும் வருவாய் பற்றாக்குறை வெறும் ரூ30 ஆயிரம் கோடி மட்டுமே குறைந்துள்ளது. மேலும் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க எந்த திட்டமும் வகுக்கவில்லை.

அதேபோல் திமுக தேர்தல் வாக்குறுதியில் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் என்று சொல்லிவிட்டு இப்போது தகுதியான குடும்ப தலைவிக்கு என்கிறார்கள். ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை. ரூ.7000 கோடி ஒதுக்கிவிட்டு 1 கோடி பேருக்கு ரூ.1000 கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை” என்றார்.