கிரிக்கெட் போட்டியை கண்ட பிரதமர்கள்

குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் பாரத ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனிடும் பார்வையிட்டனர். இரு நாடுகளும் இணைந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கி 75 ஆண்டுகள் ஆகியுள்ளதை நினைவுகூறும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடியும் ஆன்டனி அல்பனிசும் நேற்றே அகமதாபாத் நகருக்கு வருகை தந்தனர். மைதானத்தில் வீரர்களுடன் இருவரும் கலந்துரையாடினர். பின்னர், போட்டி தொடங்குவதற்கு முன்பாக பாரத அணி வீரர்களுடன் இணைந்து பிரதமர் மோடி தேசிய கீதம் பாடினார். அப்போது மைதானத்தில் குழுமியிருந்த அனைவரும் தேசிய கீதம் பாடினர். இந்த வீடியோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதனை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.