கவனத்தை ஈர்த்த டுவீட்

நடிகை கஸ்தூரி சமூக ஊடகங்களில் அவ்வப்போது பரபரப்பான பகிர்வுகள், செய்திகளை போட்டு வருபவர். இவர் போட்ட, ‘திரா விடியா’ போன்ற சில பதிவுகள் இன்றுவரை மக்களால் சமூக ஊடகங்களில் கையாளப்பட்டு வருகின்றன. அவ்வகையில், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இது குறித்து கஸ்தூரி தற்போது போட்டுள்ள டுவிட்டர் பதிவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. அவரது டுவிட்டர் பதிவில், “வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை .  இது வந்தோரை வாழவைக்கும்  தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர்  என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை” என்று கூறியுள்ளார்.