ராகுலுக்கு சொந்தவீடு கிடையாதாம் !

சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, “கடந்த 1977ல் நாங்கள் வசித்து வந்த அரசு பங்களாவை என் குடும்பத்தினர் காலி செய்து கொண்டிருந்தனர். ஏன் காலி செய்கிறீர்கள்? என தாயிடம் கேட்டேன். ‘அது அரசு வீடு, நமது வீடு அல்ல’ என்று அவர் பதில் அளித்தார். அது எங்கள் வீடு தான் என அதுவரை நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ‘அடுத்து எங்கு செல்கிறோம்’ என கேட்டதற்கு ‘தெரியாது’ என பதில் அளித்தார். எனக்கு, 52 வயதாகிறது. இன்று வரை எனக்கு சொந்த வீடு இல்லை. நான் டெல்லியில் வசிக்கும் வீடு கூட என்னுடையது அல்ல” என அவர் பேசினார். ‘இத்தனை வருடங்கள் பரம்பரையாக நாட்டை ஆண்டு, போபர்ஸ் ஊழல், ஆயுத பேர ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல் என பஞ்ச பூதங்களிலும் பல்லாயிரம் ஊழல்கள் செய்து நாட்டையே கொள்ளையடித்துவிட்டு தற்போது சொந்த வீடு இல்லை என ராகுல் கூறுகிறார். இந்த வருடத்தின் மிகச்சிறந்த ஜோக் இது’ என சமூக ஊடகங்களில் மக்கள் பலவாறு கிண்டல் செய்து வருகின்றனர்.