பதிகம் பாடி உலக சாதனை

திருப்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவி தேவதர்ஷினி (16). இவர் பன்னிரு திருமுறைகளிலுள்ள 18,327 பாடல்களை 183 மணி நேரம் 43 நிமிடம் 33 வினாடிகளில் பாடி நோபில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். அனைத்து கலைகளுமே இறைவனை அடைவதற்காக அந்த வகையில் தேவதர்ஷினி இசைக்கலையை இறைவனுக்கு அர்ப்பணித்து சாதனை படைத்துள்ளார். இவரை பாராட்டும் விதமாக ப்ரேரணா அறக்கட்டளை மற்றும் சம்ஸ்கார் பாரதி அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் நேரடியாக தேவதர்ஷினி வீட்டிற்கு சென்று பாராட்டு தெரிவித்தனர். திருப்பூர் மாவட்ட சம்ஸ்கார பாரதி தலைவர் ஸ்ரீமதி மஞ்சுராஜராஜன் தேவதர்ஷினிக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.