மாநிலங்கள் சம்மதித்தால் நங்களும் தயார்

டெல்லியில் தொழில் அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அதன் உறுப்பினர்களுடன் உரையாடினார் மத்திய நிதியமைச்ச்ர் நிர்மலா சீதாராமன். அப்போது பெட்ரோலிய பொருட்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “மாநில அரசுகள் சம்மதம் தெரிவித்தால், பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர முடியும்” என்றார். மேலும், “மின்சாரம் உள்ளிட்ட சில துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக, வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்தில் பொது மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையிலும் அதனை நாங்கள் கடைபிடித்துள்ளோம். மூலதன செலவுதான் இந்த பட்ஜெட்டின் உண்மையான நோக்கம். தற்போது தாக்கல் செய்யப்பட்ட 2திநிலை அறிக்கையில் மூலதன செலவுகள் 33 சதவீதம் அதிகரிக்கப்பட்டு மொத்தம் ரூ. 10 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது” என கூறினார்.