தி.மு.க பேச்சாளர் மீது அவதூறு வழக்கு

சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என் ரவி பற்றி அவதூறாக பேசினார். இதனைத் தொடர்ந்து, ஆளுநர் குறித்து அவதூறகவும் கீழ்தரமாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய தி.மு.க பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது, ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், தரக்குறைவாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஆளுநர் மாளிகையின் துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையவழியிலும், தபால் மூலமாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக ஆளுநரின் செயலாளர், தி.மு.க தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.