மூன்று மாநில தேர்தல் தேதி அறிவிப்பு

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மற்றும் தமிழகத்தின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இதனை அறிவித்தார். அதன்படி, மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27ம் தேதியும், திரிபுராவில் பிப்ரவரி 16ம் தேதியும் தேர்தல் நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 27ம் தேதியும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.