ஸ்ரீராம் சேனா தலைவர் மீது துப்பாக்கி சூடு

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் ஹிண்டலகா கிராமத்தில் தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டு இருந்த ஸ்ரீராம் சேனா அமைப்பின் மாவட்டத் தலைவர் ரவி கோகிடகேரா மற்றும் அவரது வாகன ஓட்டுனர் மீது, சில மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் ரவி கோகிடகேராவின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது வாகன ஓட்டுனரும் தாக்குதலில் காயமடைந்தார். இதனை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அவர்கள் இருவரையும் மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதில், ரவி உடல்நலம் தேறியுள்ளார். தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.