தி.மு.க நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் கைது செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்களை கைது செய்ய முற்பட்ட காவல்துறையினரிடம் தி.மு.கவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம். மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது தி.மு.கவுக்கு வாடிக்கையாக இருந்தாலும், தி.மு.க நாடாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்ற பொதுக் கூட்டத்திலும் இவ்வாறு தி.மு.க நிர்வாகிகள் நடந்து கொண்டது அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது. இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு தி.மு.க நிர்வாகிகளையும் கைது செய்ய முதல்வர் உடனடியாக உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.