பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றை சேர்த்து வழங்கக்கோரியும், தமிழக அரசை கண்டித்தும் சேலத்தில் பா.ஜ.கவின் விவசாய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது பா.ஜ.கவினர் தங்கள் கைகளில் கரும்புகளை ஏந்தியவாறு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, வெல்லம், தேங்காய் வழங்க வேண்டும். விவசாயிகளிடம் கரும்புகளை கொள்முதல் செய்து அவற்றை பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க வேண்டும் எனக்கோரி கோஷங்கள் எழுப்பினர். மேலும், விவசாயிகளை வஞ்சிக்கும் தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.