ஆதார் அட்டை புதுப்பித்தல்

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை வழங்கப்பட்ட நிலையில், இது வரையில் புதுப்பிக்காத ஆதார் எண் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு  புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மக்கள், மைஆதார் போர்ட்டல் மூலம் ஆன்லைனில் அல்லது அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்று தேவையான ஆவணங்களை (அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று) பதிவேற்றுவதன் மூலம் பொது மக்கள் தங்கள் ஆதார்களைப் புதுப்பிக்கலாம். நவம்பர் 09, 2022 அன்று அறிவிக்கப்பட்ட ஆதார் (பதிவு மற்றும் புதுப்பிப்பு) (பத்தாவது திருத்தம்) விதிமுறைகள் 2022ன் கீழ், பொது மக்கள் தங்கள் ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. எனவே இந்திய தனித்துவ அடையாள ஆணையம், பொது மக்கள் தங்களின் முக்கிய தகவல்களைத் துல்லியமாக பெறுவதற்கு அவர்கள் தங்களுடைய ஆதார் எண்ணைப் புதுப்பிக்கத் தேவையான ஆவணங்களைப் புதுப்பிக்குமாறு வலியுறுத்துகிறது. தங்களுடைய ஆதார்களை தற்போதைய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுடன் புதுப்பித்து வைத்திருப்பது பொது மக்களுக்கு நன்மையை அளிக்கும். மேலும் ஆதாரில் உள்ள ஆவணங்களை புதுப்பித்து வைத்திருப்பது, சீராக வாழ்வதற்கும், சிறந்த சேவைகள் மற்றும் துல்லியமான அங்கீகாரத்தை பெறுவதற்கும் உதவுகிறது.