ஒன்பது மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, “குளிர்கால கூட்டத்தொடர் அமர்வின்போது தொடங்கியதில் இருந்து நடைபெற்ற 13 அமர்வுகளில், மக்களவையில் 9 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் மக்களவையில் ஏழு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஒன்பது மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து குளிர்கால கூட்டத்தொடர் ஒரு வாரம் குறைக்கப்பட்டது” என தெரிவித்தார்.