பா.ஜ.க நிர்வாகி மீது தாக்குதல்

செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி திருக்கழுக்குன்றம் துரை. தனசேகர் கடந்த 18ம் தேதியன்று திருக்கழுக்குன்றம் காவல் நிலையம் அருகாமையில் சில சமூக விரோதிகளால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானார். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைபெற்று வருகிறார். அவரை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்த அண்ணாமலையின் டுவிட்டர் பதிவுகளில், “இந்த திறனற்ற தி.மு.க ஆட்சியில், இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக மாறியிருக்கும் தமிழகத்தில், கஞ்சா விற்பவர்களை தட்டிக் கேட்ட தமிழக பா.ஜ.க நிர்வாகி தனசேகர் அவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ள கயவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும். போதை ஒழிப்பு என்ற பொய் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு, அதிகார போதையில் மிதக்காமல் தமிழக முதல்வர் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை திறம்பட செய்வார் என்று நம்பும் மக்களை இனியும் ஏமாற்றாமல் தன் பணியில் கவனம் செலுத்துவார் என்று நம்புகிறோம்” என்றும் “கஞ்சா விற்பவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து அவர்களால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்ட தமிழக பா.ஜ.க நிர்வாகி ததனசேகர் மற்றும் அவரது குடும்பத்தாரை சற்று நேரத்திற்கு முன்பு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சந்தித்து அவரோடு தோளோடு தோள் நிற்பேன் என்ற வாக்குறுதியை அளித்தேன்” எனவும் தெரிவித்துள்ளார்.