ஆக்கிரமிப்பு பகுதியில் ஆசாதி கோஷங்கள்

பாகிஸ்தான் ராணுவம் பாரதத்திடம் சரணடைந்ததையொட்டி நமது தேசமெங்கும் ‘விஜய் திவஸ்’ என்ற வெற்றித் திருநாள் கொண்டாடப்பட்டது. அதே சமயத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை கோரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. சமீபத்திய மாதங்களாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிக்கடி பாகிஸ்தான் எதிர்ப்பு மற்றும் ராணுவ எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அங்கு அமைதியின்மை தொடர்கதையாகியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் உயர்மட்ட தலைவர் தன்வீர் இல்யாஸை ஒரு அரசு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் அவமதித்ததை அடுத்து, அங்கு “ஆசாதி கோஷங்கள்” அதிகரித்துள்ளன என ஏசியன் லைட் இன்டர்நேஷனல் பத்திரிகை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.