காஷ்மீர் பண்டிட்கள் சீராய்வு மனு தள்ளுபடி

காஷ்மீரில் கடந்த 1989 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில் கஷ்மீரின் பூர்வீகக் குடிமக்களான காஷ்மீர் பண்டிட்கள் மீது முஸ்லிம்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி பலநூறு அப்பாவி ஹிந்துக்களை கொன்றனர், பெண்களை மானபங்கம் செய்தனர், அவர்களது நிலங்கள் அபகரிக்கப்பட்டன. இதில் சுமார் 700 பேர்கொல்லப்பட்டனர் என கூறப்பட்டாலும் உண்மை எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆனால் அதன் மீது மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதையடுத்து, ‘ரூட்ஸ் இன் காஷ்மீர்’ என்ற காஷ்மீர் பண்டிட்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், “காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ அல்லது என்.ஐ.ஏ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என கோரப்பட்டது. இந்த மனுவை கடந்த 2017ல் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.அந்த அமைப்பு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து, அந்த அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.அதில், உச்ச நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.