திராவிட மாடல் கால்வாய்

தருமபுரி திருவண்ணாமலை நான்கு வழி சாலை விரவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டதின் ஒரு பகுதியாக, அரூர் மொரப்பூர் சாலையில் நேதாஜி நகர் பகுதியில் நடைபெற்று வரும் பணியில், வழியில் உள்ள மின் கம்பங்களை அகற்றாமல், மின் கம்பத்துடன் சேர்த்து கழிவுநீக் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. வெங்காயத்தாள் போல உரிந்து வரும் சாலைகள், பைக்குடன் சேர்த்து காங்கிரீட் சாலை, ஜீப்புடன் சேர்த்து காங்கிரீட் சாலை, சாலையோர தண்ணீர் பம்புகளை அகற்றாமலேயே அதன் மீது காங்கிரீட் சாலைகள் அமைத்தல், இணைப்பே தராமல் நட்டுவைக்கப்பட்ட ஜல்ஜீவன் குடிநீர் திட்ட குழாய்கள் போன்ற எண்ணற்ற எங்கள் திராவிட மாடல் திட்டங்களின் வரிசையில் இப்போது மற்றுமொரு திராவிட மாடல் கால்வாய் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.