அறநிலையத் துறையில் ஊழல்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைவெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்காக, கோபுரத்தில் உள்ள கடவுள் சிலையின் முகத்தை துளையிட்டு, சேதப்படுத்தி, சிசிடிவி பொருத்தியுள்ளனர். மக்களின் இறை நம்பிக்கையுடன் விளையாடும் வகையில் தி.மு.க அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் இது. தமிழக கோயில்களுக்குச் சொந்தமான நகைகளை உருக்கி, தங்கக் கட்டியாக்கி அதிலும் ஊழல் செய்ய முற்படுகின்றனர். அறநிலையத் துறையில் அனைத்து வகையிலும் தொடர் ஊழல்களும் களவுகளும் நடைபெறுகிறது. அர்ச்சகர்களின் பயிற்சிக் காலத்தை 5 ஆண்டில் இருந்து ஓராண்டாகக் குறைப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு ஆதீனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆகம அர்ச்சகர் பயிற்சியை ஓராண்டுக்கு சுருக்க முடியாது. எனவே, ஆதீனங்கள், மடாலயங்கள், ஆன்மிக வழிபாடுகள், மரபுகளில் தலையிடுவதை தமிழகஅரசு கைவிட வேண்டும். கோயில்களின் பண்பாடு, மரபைச் சிதைக்கும் முயற்சியில் தி.மு.க அரசு ஈடுபடுகிறது” என கண்டித்துள்ளார். மேலும் தனது டுவிட்டர் பதிவில், “தி.மு.க ஆட்சியில் மக்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. போதைப் பொருள் புழக்கத்துக்கு தி.மு.கவினரே உதவுகின்றனர். அனைவருக்கும் சுலபமாக போதைப் பொருள் கிடைக்கும் அளவுக்கு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.