தி.மு.கவினர் அராஜகம்

குமரி மாவட்டம் வாள்வச்ச கோஷ்டம் மகிஷாசுரமர்த்தினி பகவதி‌ அம்மன் கோயிலுக்கு சொந்தமான கோயில் வழிகாட்டி பலகையில் அப்பகுதி தி.மு.கவினர் உதயநிதி ஸ்டாலினை மையப்படுத்தி போஸ்டர் ஒட்டி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்துமுன்னணி அமைப்பினர் மற்றும் ஊர் மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தி.மு.கவினரால் அந்த போஸ்டர் அப்புறப்படுத்தப்பட்டது.