அரசு பள்ளியில் மாதா சிலை

செங்கல்பட்டு மாவட்டம் சந்தோஷபுரம் ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மதில் சுவற்றில் மாதா சிலை ஒன்று மாடம் போன்ற அமைப்புடன் நிறுவப்பட்டுள்ளது. இது அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளையும் அவர்களின் பெற்றோரையும் அக்கம் பக்கத்தினரையும் அரசு செலவில் மதம் மாற்றும் முயற்சியா? என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே, செங்கல்பட்டு இந்துமுன்னணி அமைப்பினர், மாதா சிலையை அகற்ற கோரி மாநில கல்வித் துறைக்கும் காவல் துறைக்கும் மனு அளித்துள்ளனர்.