பயங்கரவாதிகள் மிரட்டல் கடிதம்

மங்களூருவில் ஒரு ஆட்டோவில் நடந்த குக்கர் வெடிகுண்டு வெடிப்பு பயங்கரவாத செயலில் ஈடுபட்ட முகமது ஷாரிக் என்ற முஸ்லிம் பயங்கரவாதி தற்போது கைது செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளான். அந்த குண்டு வெடிப்புக்கு நாங்கள் தான் காரணம் என இஸ்லாமிய எதிர்ப்பு கவுன்சில் என்ற ஒரு புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பினர் இதுகுறித்து எழுதியுள்ள கடிதத்தில், “நாங்கள், இஸ்லாமிய எதிர்ப்பு கவுன்சில் (IRC), இந்த செய்தியை தெரிவிக்க விரும்புகிறோம். மங்களூருவில் காவி பயங்கரவாதிகளின் கோட்டையான காத்ரியில் (தட்சிண கன்னடா மாவட்டத்தில்) உள்ள ஹிந்துத்துவா கோயிலை தாக்க எங்கள் முஜாஹித் சகோதரர் முகமது ஷாரிக் முயன்றார். இந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்றாலும், செயல்பாட்டு திறன்கள் தந்திரங்கள் வகையில் இதனை நாங்கள் வெற்றியாகவே கருதுகிறோம். ஷாரிக் மாநில புலனாய்வு அமைப்புகளால் தேடப்பட்டு துரத்தப்பட்டு வந்தபோதிலும் வெற்றிகரமாக தப்பினார். தாக்குதலை நடத்தவும் முயன்றார். ஆனால், குறித்த நேரத்திற்கு முன்னதாகவே குண்டு வெடித்ததால் எங்களது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். எங்கள் சகோதரன் கைது செய்யப்பட்டதைக் கொண்டாடுபவர்களுக்கு, குறிப்பாக ஏ.டி.ஜி.பி அலோக் குமாருக்கு, உங்கள் மகிழ்ச்சி சிறிது காலம் நீடிக்கும், உங்கள் அடக்குமுறையின் பலனை நீங்கள் விரைவில் அறுவடை செய்வீர்கள் என்று நாங்கள் கூறுகிறோம். நாங்கள் உங்களை எங்கள் கண்காணிப்பில் வைத்துள்ளோம். எப்போது உங்களை அணுகுவோம் என்பதுதான் முக்கியம். நாங்கள் உங்களிடம் வருவோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.