பள்ளியின் நிர்வாகி கைது

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் நிர்வாகி வினோத், பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவ, மாணவிகள் வினோத்தின் பாலியல் சீண்டல் குறித்து தங்களது பெற்றோரிடம் கூறினர். இதைத் தொடர்ந்து, பள்ளியை முற்றுகையிட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளித் நிர்வாகி வினோத்தை கைது செய்யக்கோரி பள்ளி வளாகத்திலேயே மாணவ, மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே வினோத் தலைமறைவானார். வினோத் மீது போக்ஸோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை காவல்துறை அவரை தேடிவந்தது. கோவா மாநிலத்தில் வினோத் பதுங்கியிருப்பதை அறிந்த காவ்ல்துரையினர் அவரை அங்கு கைதுசெய்து தமிழகம் அழைத்து வந்தது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வினோத்தை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.