புதிய ஆளுநர் நியமனம்

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக தற்போதைய மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது மேற்கு வங்கத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தின் புதிய மேற்கு ஆளுநராக டாக்டர் சி.வி. ஆனந்த போஸை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். இதனையடுத்து மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இன்று பொறுப்பேற்க உள்ளார். கேரளாவைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக உள்ளார். மாவட்ட ஆட்சியர், மாநில தலைமை செயலாளர், மத்திய அரசின் செயலாளர், ஐ.நா அதிகாரி என பல்வேறு பதவிகளை இவர் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.