தலையிடும் கேரள அரசு

கேரள உயர்கல்வித் துறையில் ஆளுநர் தலையிடுவதாக கூறி, ஆளும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவன் நோக்கிய ஒரு கண்டன பேரணி நடத்தப்பட்டது. முன்னதாக, இந்த பேரணியை நிறுத்த உத்தரவிட முடியாது என கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், கேரள அரசு மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், “அரசின் பணியில் நான் தலையிட முயற்சித்ததற்கு ஒரு உதாரணமாவது சொல்லுங்கள், அப்படி இருந்தால் நான் ராஜினாமா செய்ய தயார். அதே சமயம், பல்கலைக் கழகங்களின் அன்றாட செயல்பாட்டில் மாநில அரசு தலையிட்டதற்கு 1,001 உதாரணங்களை என்னால் கொடுக்க முடியும். நான் அழுத்தங்களுக்கு அடிபணியும் ஆள் கிடையாது. கடந்த ஆண்டு வரை நீங்கள் ஏன் இந்த பிரச்சினையை எழுப்பவில்லை? பல்கலைக் கழகங்கள் கட்சித் தொண்டர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் ஏகாதிபத்தியமாக மாறிவிட்டன” என கூறினார்.