திட்டமிடாத அவசர பணிகள்

மழையால் பாதிக்கப்பட்ட ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என பொய் சொல்கின்றனர். சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்து தரப்படவில்லை. பல பகுதிகளில் மழைநீர் வடியாத நிலை உள்ளது. இதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். சென்னையில் முறையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அவசர கோலத்தில் திட்டமிடாமல் தமிழக அரசு பணிகளை மேற்கொண்டதால்தான் மழைநீர் தேங்குகிறது. சென்னையில் மிதமான மழையே பெய்துள்ளது. பெரிய அளவில் மழை பெய்தால் பாதிப்புகள் இன்னும் அதிகமாக இருக்கும்” என்று கூறினார்.