பஞ்சாப் அரசுக்கு எச்சரிக்கை

தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.ஹெச்.ஆர்.சி), பஞ்சாப் தலைமைச் செயலாளர் மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் காணொலி மூலம்ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தியது.அப்போது பஞ்சாப்பின் பல பகுதிகளில் வேளாண் கழிவுகளை எரிக்கும் சம்பவங்களால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து ஆணையம் தனது கவலையை வெளிப்படுத்தியது.இத்தகைய சம்பவங்களால் டெல்லி உட்பட பல நகரங்களில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்களின் ஆரோக்கியம் சீர் குலைந்து வருவதையும் சுட்டிக்காட்டியது.வேளாண் கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள்கட்டுப்படுத்தப்பட வேண்டும்.நிலைமை சீரடையவில்லை என்றால் பஞ்சாப் அரசு மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தது. மேலும், பஞ்சாப்பில் வேளாண் கழிவுகளை எரிப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க பஞ்சாப் அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.