டி.ஆர்.எஸ் எம்.பி வீட்டில் சோதனை

கிரானைட் முறைகேடுதொடர்பாக, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி ரவிச்சந்திராவின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தொடர்ந்து இரண்டு நாட்களாக தெலங்கானா மாநிலத்தில் அமலாக்க துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் இணைந்து, ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத் துறை அமைச்சர் கமலாகர் மற்றும் எம்.பி ரவிச்சந்திராவின் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். ஒரே சமயத்தில் இந்த சோதனை நடைபெற்றது.அதிகாரிகள் 20 குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.இந்த தொடர் சோதனைகளால், அம்மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.