மதகுரு கைது

வடகிழக்கு டெல்லியின் மவுஜ்பூர் பகுதியில் உள்ள மசூதிக்குள் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஜாப்ராபாத் காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை புகாரளிக்கப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக முகமது இம்ரான் என்ற ஆசிரியரை காவல்துறை கைது செய்துள்ளது.பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த முகமது இம்ரான், இந்த மசூதிக்குள் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் பணியை செய்து வந்தார்.இவர் மீது போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம், இதே வடகிழக்கு டெல்லியின் கரவால் நகர் பகுதியில் உள்ள ஒரு மதரஸாவில் 11 வயது சிறுவனுக்கு பாலியல் கொடுமை செய்ததாக ஒரு மதகுரு கைது செய்யப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.