ஜி.எஸ்.டி மோசடிகள் கண்டுபிடிப்பு

நாடு முழுவதும் எளிய, ஒரே சீரான வரி நடைமுறையை கொண்டுவரும் நோக்கில் மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியது.இந்தக் கட்டமைப்பின் கீழும் சிலர் வரி எய்ப்புகளை செய்து வருகின்றனர்.இந்த மோசடிகளை கட்டுப்படுத்த ஜி.எஸ்.டி புலனாய்வு இயக்குநரகம்தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அவ்வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ரூ.55,575 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பும் 22,300 போலி ஜி.எஸ்.டி அடையாள எண்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதில் ஈடுபட்ட 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சி.பி.ஐ அமைப்பு, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன எனஜி.எஸ்.டி புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபரில்ரூ.1.52 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூலாகி உள்ளது.இதுவரையிலான ஜிஎஸ்டி வசூலில் இது இரண்டாவது அதிகபட்ச வசூலாகும்.கடந்த ஏப்ரல் மாதம் மிக உச்சமாக ரூ.1.68 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூலானது குறிப்பிடத்தக்கது.