முதல்வருக்கு அமலாக்கத்துறை சம்மன்

ஜார்கண்டில் சட்ட விரோத சுரங்க முறைகேடுகள் தொடர்பாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடந்த வாரம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதில், கடந்த 3ம் தேதி விசாரணைக்கு ஆஜராக கூறியிருந்த நிலையில், ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை. மேலும், இதற்காக அமலாக்கத்துறையை குறை கூறியிருந்த ஹேமந்த் சோரன், தன்னை கைது செய்ய தயாரா? என சவால் விட்டிருந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு அமலாக்கத்துறை சார்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் வரும் 17ம் தேதி ராஞ்சியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.