பி.எப்.ஐ உறுப்பினர்களுக்கு வலை

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க யுவமோர்ச்சா தலைவர் பிரவீன் நெட்டாரு கொலை வழக்குத் தொடர்பாக சமீபத்தில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 4 பேருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸை (கவன ஈர்ப்பு சுற்றறிக்கை) தேசிய விசாரணை முகமை வெளியிட்டுள்ளது. இதன்படி, சுலையா தாலுகா, பல்லாரே கிராமத்தைச் சேர்ந்த முகமது முஸ்தபா என்ற முஸ்தபா பைஜாரு குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் பரிசும் மடிகேரியைச் சேர்ந்த எம்.ஹெச் துபைல் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 5 லட்சம் பரிசும் கல்லுமுட்லு மனே பகுதியைச் சேர்ந்த எம்ஆர் உமர் பரூக் பற்றி தகவல் அளித்தால் ரூ. 2 லட்சம் பரிசும், சுலையா பகுதியில் உள்ள பெல்லாரே கிராமத்தைச் சேர்ந்த பெயின்டர் சித்திக் என்ற குஜுரு சித்திக் குறித்து தகவல் அளித்தால் ரூ. 2 லட்சம் பரிசும் வழங்கப்படும் என என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.