கோவையில் அமைதி பேரணி

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கையில், “வெடிகுண்டு மற்றும் இன, மதக் கலவரங்களுக்குக் கோவை மாநகரை கேந்திரமாக மாற்றும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்து, கோவை மாநகரை அனைவரும் ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும் வாழ்ந்திடும் தலமாக மாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. எனவே, கோவை மாநகரில் நிரந்தரமாக அமைதியை, சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் பொருட்டு நவம்பர் 17ம் தேதி கோவையின் அனைத்து கல்வி நிறுவனங்கள், தொழில், வணிக நிறுவனங்கள், மத மற்றும் சமுதாய அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளக்கூடிய வகையில் ஓர் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. இதில் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.