சிறுவனின் மதவெறி செயல்

மும்பையில் உள்ள கிழக்கு உல்லாஸ் நகரின் கோஐ மைதானம் அருகே தீபாவளி இரவில் அதிகாலை 2 மணியளவில், ஒரு முஸ்லிம் மைனர் சிறுவன், தனது வீட்டின் அருகேயுள்ள ஹீரா பன்னா அப்பார்ட்பெண்ட் குடியிருப்பு பகுதியில் உள்ள ஹிந்துக்களின் வீடுகள் மீது ராக்கெட் வெடிகளை வேண்டுமென்றே குறிபார்த்து செலுத்தியுள்ளான். ராக்கெட்டுகள் சில அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள ஏர் கண்டிஷனிங் யூனிட்களின் வெளிப்புற கருவிகளை தாக்கியது. சில ராக்கெட்டுகள் கட்டிடத்தில் உள்ள சில அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள்ளும் நுழைந்தன. இதனை வீடியோ எடுத்த நபர் தனது நவாப்69_ என்ற இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அந்த கட்டிடத்தில் வசிக்கும் ஒருவர் உல்லாஸ்நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. சிறுவன் என்பதால் அவனை இதுவரை கைது செய்யவில்லை. எனினும், அவன் விரைவில் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவான். வீடியோ எடுத்த நபர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ பகிரப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு ‘nawab69_’ முடக்கப்பட்டது என காவலர்கள் தெரிவித்தனர்.