புதிய தலைமை நீதிபதியாகிறார் டி.ஒய்.சந்திரசூட்

உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித் வரும் நவம்பர் 8ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, மத்திய அரசுக்கு அடுத்த தலைமை நீதிபதியாக, தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட் பெயரை புதிய தலைமை நீதிபதி பதவிக்கு லலித் பரிந்துரைத்தார். அது அரசால் ஏற்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டை நாட்டின் 50வது தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார். அவருக்கு வரும் நவம்பர் 9ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். சந்திரசூட் 2024, நவம்பர் 10ம் தேதி வரை இந்தப் பதவியில் இருப்பார். நீண்ட காலம் தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஒய்.வி. சந்திரசூட்டின் மகன்தான் டி.ஒய். சந்திரசூட் என்பது குறிப்பிடத்தக்கது.