தாய்மொழி வளர்க்க நல்லதொரு முயற்சி

மத்தியப் பிரதேசம் போபாலில் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் மருத்துவ படிப்புக்கான ஹிந்தி புத்தகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான், மருத்துவர்கள், தங்கள் மருந்துச் சீட்டில் ஆர்.எக்ஸ் என்ற லத்தீன் மொழி குறியீட்டுக்கு பதில் ‘ஸ்ரீஹரி’ என குறிப்பிடலாம்’ என ஆலோசனை கூறினார். இதையடுத்து சட்னா மாவட்டம் கோட்கர் என்ற கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர் சர்வேஷ் சிங் என்பவர், முதல்வரின் ஆலோசனையை ஏற்று அன்று மாலையில் இருந்தே தான் எழுதிக் கொடுக்கும் மருந்துச் சீட்டில் ‘ஸ்ரீஹரி’ என குறியிட துவங்கியதுடன் மருந்துகளின் பெயர்களையும் ஹிந்தியிலேயே எழுதிக் கொடுக்கத் துவங்கினார்.