விபத்தில் உதவிய அமைச்சர்

கர்நாடக மின்துறை அமைச்சர் வாசுதேவசுனில்குமார், உடுப்பியில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தனது காரில் தனது வீட்டுக்கு புறப்பட்டார். வழியில் குன்டக்டா சதுக்கம் அருகில், ஒரு காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டிருந்தது. இதில் அடிபட்ட இளைஞர் ஒருவர் ரத்த காயங்களுடன் கிடந்தார். இதை கண்ட அமைச்சர் சுனில்குமார், உடனடியாக காரை நிறுத்தி காயமடைந்த இளைஞர் அருகில் சென்று, ஆறுதல் கூறி அவரை தன் காரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தார். பின்னர், அவ்வழியே சென்ற ஒருவரது இருசக்கர வாகனத்தில் ஏறி தனது வீட்டுக்கு சென்றார்.