குருகிராமில் மத பதற்றம்

ஹரியானா மாநிலம் குருகிராமில், போடகலா கிராமத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்களை ஒரு கும்பல் தாக்கியதாக புகார் தெய்விக்கப்பட்டுள்ளது. சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மசூதிக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பெண்களைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த புகாரில் “போரா கலன் கிராமத்தில் முஸ்லிம் குடும்பங்களுக்கு நான்கு வீடுகள் மட்டுமே உள்ளன. கடந்த புதன்கிழமை காலை சுமார் 200 பேர் கொண்ட கும்பல் மசூதியில் தொழுகை செய்தவர்களை அச்சுறுத்திது. மீண்டும் அன்றிரவு, மசூதியில் உள்ள தொழுகை கூடத்தில் தொழுது கொண்டிருந்தபோது, அந்த கும்பல் வந்து தாக்கியது. முஸ்லிம்கள் அந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டுமென்று மிரட்டியது. அக்கும்பல் தொழுகைக் கூடத்திற்கு பூட்டு போட்டுவிட்டு சென்றது. மக்கள் கூட்டம் கூடியதும், தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடியது” என சுபேதார் நாசர் முகமது என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.