ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா ஆகியோர் அடங்கி அமர்வு நேற்று தீர்ப்பு அளித்துள்ளது. அதில், நீதிபதி சுதான்சு துலியா, ஹிஜாப் அணிய தடைவிதித்த கர்நாடக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். ஆனால், நீதிபதி ஹேமந்த் குப்தா, ஹிஜாப் வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து மாறுபட்ட வகையில் தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கு உரிய நடவடிக்கைக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த மறுபட்ட தீர்ப்பின் காரணமாக இந்த விவகாரம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.