தி.மு.கவின் சமூக நீதி

தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட டி.ஆர் பாலு, மற்ற நிர்வாகிகளுடன் இணைந்து ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி படங்களுக்கு மலர் துாவி மரியாதை செய்தார். இதற்காக கழற்றிப்போட்ட செருப்பை அணிய மறந்து இருக்கையில் சென்று அமர்ந்து விட்டார். பின்னர் அருகில் இருந்த ஒரு தொண்டரிடம் தன் செருப்பை எடுத்து வரும்படி கூற, அவரும் தன் கையில் செருப்பை எடுத்து வந்து பவ்யமாக டி.ஆர்.பாலு கால் அருகே வைத்தார். இந்த சம்பவம் தி.மு.கவினரிடமும் பொதுமக்களிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  ‘இதுதான் தி.மு.கவின் சமூக நீதியா, திராவிட மாடலா?’ என்று பொதுமக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.