தமிழக பள்ளிகளில் கலா உத்சவ் போட்டிகள்

மத்திய கலாசாரத் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும், ‘கலா உத்சவ்’ என்ற கலை, பண்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான போட்டிகளை நடத்தி, மாநில அளவில் தேர்ச்சி பெறுவோரை, ஒடிசாவில் நடக்கும் தேசிய அளவிலான இறுதி போட்டிக்கு அனுப்பும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழக ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு வாய்ப்பாட்டு இசை, பாரம்பரிய நாட்டு புற வாய்ப்பாட்டு இசை, தாள வாத்தியம், மெல்லிசை, செவ்வியல் நடனம், பாரம்பரிய நாட்டுப்புற நடனம், காட்சி கலை இரு பரிமாணம் மற்றும் முப்பரிமாணம், உள்ளூர் தொன்மை பொம்மைகள், விளையாட்டுகள் மற்றும் நாடகம் தனி நபர் நடிப்பு என தனித்தனியாக 10 வகை போட்டிகள் நடத்தப்பட வேண்டும். போட்டிகள் மாவட்ட, மாநில அளவில் நடத்தப்பட வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.