கர்நாடக அரசின் துணிச்சல்

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “கர்நாடகத்தில் மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிப்பதால், மொத்த இடஒதுக்கீட்டையும் 56 சதவீதமாக உயர்த்த கர்நாடகம் தீர்மானித்திருப்பது துணிச்சலான நடவடிக்கை. தமிழகத்திலும் அத்தகைய துணிச்சலான நடவடிக்கையை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இது மிகச்சிறந்த சமூக நீதி காக்கும் நடவடிக்கை. இதேபோல, தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து வலியுறுத்தி வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.