ஜாமீன் மனு நிராகரிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் முஸ்லிம் மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களை தட்டிகேட்டதற்காக பா.ம.க பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019 வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்குத் தொடர்பாக முகமது அசாருதீன், நிஜாம் அலி, சபருதீன் உள்பட 18 மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ), வழக்குப்பதிவு செய்து 13 பேரை கைது செய்தது. 5 பேர் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது அசாருதீன், நிஜாம் அலி, சபருதீன் உள்ளிட்ட 10 பேர் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, முதலில் பாதுகாக்கப்பட்ட சாட்சிகளை விசாரிக்க வற்புத்தமாட்டோம் எனக் கூறிய குற்றம்சாட்டப்பட்ட தரப்பு, தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை என்ற காரணத்தையே கூறி, ஜாமீன் கேட்க முடியாது என்று கூறி 10 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.