பாரதம் ஒருபோதும் தலைவணங்காது

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டுக்காக உயிர்நீத்த ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினரை கௌரவித்தார். இதற்கான நிகழ்ச்சி கங்ரா மாவட்டத்தில் உள்ள பதோலியில் நடைபெற்றது. முதலாவது பரம்வீர் சக்ரா விருது பெற்ற மேஜர் சோம்நாத் சர்மா, மகாவீர் சக்ரா விருது பெற்ற பிரிகேடியர் ஷெர் ஜங் தாபா, பரம்வீர் சக்ரா விருது பெற்ற லெப்டினென்ட் கர்னல் தன் சிங் தாபா, கேப்டன் விக்ரம் பத்ரா, சுபேதார் மேஜர் சஞ்சய் குமார் உள்ளிட்ட போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினரை கௌரவித்த ராஜ்நாத் சிங், “தியாகம் செய்த துணிச்சலான வீரர்களின் குடும்பத்தினருக்கு நாடு என்றென்றும் கடன்பட்டுள்ளது. ஒழுக்கம், கடமையில் அர்ப்பணிப்பு, தேசபக்தி மற்றும் தியாகம் மூலம் மக்களுக்கு குறிப்பாக, இளைஞர்களுக்கு பாதுகாப்பு படையினர் எப்போதும் உந்து சக்தியாக திகழ்கின்றனர். பின்னணி, மதம், நம்பிக்கை ஒரு பொருட்டு கிடையாது. நம்முடைய மதிப்பிற்குரிய மூவர்ணக் கொடி தொடர்ந்து உயரத்தில் பறக்கவேண்டும் என்பதுதான் முக்கியம். உலகிற்கு அமைதியை வலியுறுத்திய, ஒரே நாடு பாரதம். நமது ராணுவத்தின் துணிச்சல் உலகத்தால் மதிக்கப்படுகிறது. எந்த ஒரு நாட்டையும் பாரதம் தாக்கவில்லை. ஒரு இஞ்ச் அன்னிய நாட்டு நிலத்தைக்கூட நாம் கைப்பற்றவில்லை. ஆனால் அமைதியை விரும்பும் பாரதம், போருக்கு தயங்குவதாக யாரும் தவறாக நினைக்கக்கூடாது. நாட்டின் நல்லிணக்கத்திற்கு யாராவது ஊறு விளைவித்தால் உரிய பதிலடி கொடுக்கப்படும். எந்தவொரு பெரிய சக்தியாக இருந்தாலும், அது பொருட்டல்ல என்பதை கல்வான் சம்பவம் மூலம் நமது தைரியமிக்க வீரர்கள் நிரூபித்தனர். பாரதம் ஒருபோதும் தலைவணங்காது. நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிய பார்தத்தை மத்திய அரசு கட்டமைத்து வருகிறது” என்று கூறினார்.