நம்ம முன்னேற்றக் கழகத்துக்காரன் தான்

தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில், நான் ஆ.ராசாவிற்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கேட்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் பேசும் அனைத்தும் ஈ.வெ.ராமசாமி சொன்னார், ஈ.வெ.ராமசாமி புத்தகம், ஈ.வெ.ராமசாமியின் புத்தகம் மரண சாசனம், ஈ.வெ.ராமசாமி இறுதி பேருரையில் இருக்கிறது, என்று ஒரு புத்தகத்தை காண்பித்தீர்கள். அதே புத்தகத்தில், 21வது பக்கத்தில் இருந்த சில விஷயங்களை ஆ.ராசாவிற்கு இந்த மேடையில் படித்து காண்பிக்கின்றேன். அதையும் ஏற்றுக் கொள்கிறீர்களா என்பதை நீங்கள் எனக்கு சொல்ல வேண்டும். “நாதி இல்லையே.. சொல்கிறதற்கு நாதி இல்லையே, சிந்திக்க நாதி இல்லையே! ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்? பெண்டாட்டியைத் தவிர மத்தது எல்லாத்தையும் கொடுக்கிறான். ஓட்டு வாங்குவதற்கு, இதற்கு கவலையே படமாட்டேன் என்கிறானே! யாரது? நம்ம முன்னேற்றக் கழகத்துக் காரன்தான். (தி.மு.க) மற்றவனை எல்லாம் என்னை எல்லாம் வைவான். இவனுக்கு ஏன் இதுவெல்லாம் கேடு வந்துச்சு இந்த முன்னேற்றக்காரனுக்கு? இந்த வேலையை ஏன் பண்ணிக்கிட்டு இருக்கிறான்? அவனுக்கு ஓட்டுதான் பெரிது. அவன் பெண்டாட்டி, பிள்ளையைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை. இன்னும் கொஞ்சநாள் போனால், இது வழக்கத்துக்கு வந்து விடும் என்று நம்புகிறான். பெண்டாட்டியைக்கூடக் கொடுத்து, வாங்குகிறார்போல.., ஏனென்றால் அந்த பதவி அவ்வளவு உயர்வாப் போச்சு…” என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இது நீங்கள் சொன்ன அதே மாதிரி நானும் பேசுகிறேன். இதை நான் சொல்லவில்லை. ஈ.வெ.ராமசாமி தான் சொன்னார். அண்ணன் ஆ.ராசா, இதற்கும் பேச வேண்டும் என ஆ.ராசாவின் ஸ்டைலிலேயே அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.