பி.எப்.ஐ ஹவாலா பணப் பரிமாற்றம்

அமலாக்கத்துறை அதிகாரிகள், “பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவிற்கு வளைகுடா நாடுகளில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அங்கிருந்து நிதிதிரட்டி அதனை ஹவாலா பரிமாற்றம் மூலமாக இந்தியா அனுப்பியுள்ளனர். இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் இந்த நிதி திரட்டும் செயல்களுக்கு தேஜஸ் செய்தித்தாள் முன்ணணி ஊடகமாக செயல்பட்டுள்ளது. இந்த நிதி போலி நன்கொடை ரசீதுகள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தடுப்புக்காவலில் உள்ள பல்வேறு பி.எப்.ஐ உறுப்பினர்கள், தங்களின் ஹவாலா பறிமாற்ற நடவடிக்கைகளுக்கு அபுதாபியில் உள்ள தர்பார் உணவகத்தை முக்கிய மையமாக பயன்படுத்தியுள்ளனர். ஏற்கனவே பி.எப்.ஐக்கு எதிரான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்துல் ரசாக், இந்த தர்பார் உணவகம் மூலம் பி.எப்.ஐ தொடர்புடைய பணமோசடி குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். தர்பார் உணவகத்தை அவரது தம்பி நிர்வகிக்கிறார். அப்துல் ரசாக்கின் டாமர் இந்தியா ஸ்பைசஸ் பி லிமிட் என்ற மற்றொரு நிறுவனமும் இந்த சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, ஷஃபீக் பயத் என்பவர் 2018 வரை கல்ஃப் தேஜஸ் என்ற தினசரியில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இந்த நாளிதழ், இண்டர் மீடியா பப்ளிஷிங் நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்ட தேஜஸ் செய்தித்தாளின் ஒரு அங்கம். இதன் நிர்வாகத் தலைவர்களில் ஒருவராக அப்துல் ரசாக் அப்போது இருந்தார். கடந்த 2007ல் பி.எப்.ஐ தொடங்கியவர்களில் ஒருவரான ஷபீக் பையத், கத்தாரில் நிதி திரட்டும் பொறுப்பை ஏற்றிருந்தார். இவருக்கு அபுதாபியில் இருந்த தொடர்பை பயன்படுத்தி, அப்துல் ரசாக் தர்பார் உணவகத்தை பணபரிவர்த்தனை மையமாக மாற்றிவிட்டார். ஷபீக் பையத் சமீபத்திய என்.ஐ.ஏ சோதனையின் போது கேராளவில் கைது செய்யப்பட்டார். தர்பார் உணவத்தின் உரிமையாளரான அஷ்ரஃப், வளைகுடா நாடுகளில் நடந்த நிதி திரட்டல் மற்றும் ஹவாலா நடவடிக்கைகளில் முக்கியமாக பங்காற்றியவர். பி.எப்.ஐ அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், எர்ணாகுளம் தலைவராகவும் இருந்தார். இவர் கடந்த 2010ம் ஆண்டு பேராசிரியர் ஜோசப்பின் கையை வெட்டிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். தான் தான் அந்த உணவக்கத்தின் உரிமையாளர் என்பதனை அஷ்ரஃப் இந்திய அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை. மாறாக அப்துல் ரசாக்கை முன்னிறுத்தியே தர்பார் உணவகம் மூலம் அனைத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற நிகழ்வுகளிலும் ஈடுப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளனர்.

(நன்றி: https://www.hindutamil.in/news/india/874059-abu-dhabi-restaurant-used-as-hub-for-pfi-hawala-deals.html)