பயத்தை விதைக்கும் பி.எப்.ஐ

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்பான இடங்களில் நடந்த சோதனை குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பிற மதம் சார்ந்த அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களை கொலை செய்தல், கல்லூரி பேராசிரியரின் கையை வெட்டியது போன்ற வன்முறை செயல்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஈடுபட்டுள்ளது. பிரபலமான நபர்கள், இடங்கள் மீது தாக்குதல் நடந்துவதற்காக வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத்திற்கு ஆதரவு, பொதுச்சொத்தை அழித்தல் போன்றவை பயங்கரவாத தாக்குதல் மக்கள் மனதில் அச்சத்தை உருவாக்க இந்த அமைப்பால் முயற்சிக்கப்பட்டுள்ளது’ என என்.ஐ.ஏ. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(நன்றி: https://www.dailythanthi.com/News/India/popular-front-of-indias-violent-acts-to-strike-fear-in-citizens-probe-agency-798950)