மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர்

கோவை பா.ஜ.க அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, கோவையில் அரசு பேருந்துகள் மர்ம நபர்கள் கல் வீசித் தாக்கி கண்ணாடியை உடைத்தது போன்ற சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது. அதனை மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். கோவை மாவட்ட பாஜ.க அலுவலகத்தில் மீது வீசப்பட்ட பெட்ரோல் வெடிகுண்டு, நம் சகோதர, சகோதரிகளை ஒரு போதும் தடுக்காது. மாறாக நமது நாட்டிற்கும், சமூகத்திற்கும் எதிரான இந்த சக்திகளுக்கு எதிராக, போராடுவதற்கு நமக்கு பலத்தை அளிக்கும். பெட்ரோல் வெடிகுண்டு வீசி எங்களின் மன தைரியத்தை குறைத்துவிடலாம் என நினைக்க வேண்டாம். இதுபோன்ற அச்சுறுத்தல்கள், சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும். தமிழகத்தில் சட்டம் ஒழங்கை சீரழிந்து வருவதை தி.மு.க அரசு உணர வேண்டும்” என கூறியுள்ளார்.