பயங்கரவாதிகள் கைது

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக கர்நாடக மாநில உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த சையது யாசின், மாஷ் முனீர் அகமது ஆகிய 2 பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். விசாரணையில் கைதான இருவரும் ஐ.எஸ். அமைப்பில் பயங்கரவாதம் மற்றும் வெடிகுண்டுகளை கையாள்வது குறித்து பயிற்சிகளை எடுத்துக்கொண்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களை அரங்கேற்ற திட்டமிட்டு பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதைடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில், ஷிவமொகாவைச் சேர்ந்த பிரேம்சிங், என்பவர் ஆகஸ்ட் 15ல் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாதி ஜபிவுல்லா கைதுசெய்யப்பட்ட இந்த பயங்கரவாதிகளுடன் டிக்கடி தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.