ராகுல் மீது நடவடிக்கை தேவை

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில், அழிந்து கொண்டிருக்கும் பழைய காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியா அல்லது கட்சித் தலைவர் தேர்தலுக்கு முன் ராகுல் காந்தியை மீண்டும் சந்தைப்படுத்தும் ஒரு முயற்சியா இது என சொந்தக் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் தெரியாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ராகுலின் சொகுசு நடைப்பயிற்சியில், பல இடங்களில் 18 வயதுக்கும் குறைவான குழந்தைகளை அவர் அரசியல் கருவிகளாக பயன்படுத்தி வருகிறார். இது, கண்டிக்கத்தக்கது மட்டுமில்லாமல் ஒரு குற்றமும் கூட. எனவே, இதுகுறித்து ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்தை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பான என்.சி.பி.சி.ஆர்  வலியுறுத்தியுள்ளது.